காலாற கடற்கரைகளில் நடந்து கொண்டுதான்
இருக்கிறேன்....
கடல்நீர் கற்பனையைத் தாண்டி
காலை நனைத்துக் கொண்டே வருகிறது...
கரையில் கூக்குரல்கள்...
என்னைக் கரையேறச் சொல்லி!!!!
எல்லாமே காதுக்குத் தெளிவாய் கேட்கிறது...
ஏற்றமா இறக்கமா எனத் தெரியாமல்
நீருக்குள் இறங்குகிறேன்..
முன்னைவிட வேகமாக ஒலிக்கும் குரல்கள்
கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும்
கைப்பிடித்து இழுக்க எவருமே இல்லை..
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
ஒவ்வொருவரும் துடிக்கும் அந்த விடியற்காலையில்
நான் மட்டும்.......
உன்னைத் தொலைத்த அதே கடலில்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment