Thursday, 24 March 2011

இன்னும் புரியாத ஒரு வரலாறு....

வரலாறு தெரியுமா இவர்களுக்கு..
குண்டுச்சட்டிக்குள் புகுந்து கொண்டால்
உலகம் என்ன விட்டு விடுமா..
வரலாறுகளுக்குள் வாழ்ந்தே வேராய்
போனார்களாமே..
புராணங்களிலும் வேதங்களிலும் 
புரட்டிப் புரட்டிப் பார்த்தும் 
புரியவில்லை..
எவ்வளவு தூரம் நமக்கும் வரலாறுகளுக்கும்
சரி...
நாய்க்கூண்டில் நுழைந்தால்
கண்டிப்பாய் நாய் போல் குரைக்கத்தான் வேண்டுமா..
வரலாற்றை நினைவுறுத்த வந்தவர்கள்
விரல்களால் கொளுத்துகிறார்கள்..
நாக்கு சுடாதா என்ன??
சார்பு என்று ஆங்கிலேயனை ஒதுக்கிவிட்டால்
வரலாறு செத்து விடுமா..
கருவாடு சுட்ட வரலாறை
இலக்கியங்கள்கூட சொல்கின்றனவே..
கரையோரங்களில் களவு செய்தது
மறந்து போயிருக்கலாம்..
மெர்சிடிஸகளிலும் பி.எம்.டபுள்யுகளிலும்
அந்த ஒத்தைப் படகுகள்
காணாமல்தான் போயிருக்கலாம்...
என்ன செய்வது?
நாகரீகம் என்பது பாடமா என்ன
கற்றுக் கொடுப்பதற்கு?
தொழில்களில்தான் சாதி என்று
சொன்னால் புரியாதுதான்
அதற்காக..
புரியாமல் இருக்கட்டும்..
சுற்று வட்டத்தில் மீண்டும் 
சரித்திரம் எழுதப்படும்போது
புரியட்டும்!!!!!!

No comments:

Post a Comment