Friday 25 March 2011

புரியாத சில விசயங்களும் புளித்துப் போன காரணங்களும்

லிபியாவில் ஒரு சொந்த நாட்டு இராணுவமே மக்களைக் குண்டு வீசி தாக்குவதைப் பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்த கடாபியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்த 'உலக போலிஸ்' அமெரிக்காவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்கு ஆதரவாக எழுந்த ஐரோப்பா, ஆசிய நாடுகளின் 'மனித தன்மையினையும்' பாராட்டாமல் இருக்க முடியாது. கடாபியின் சர்வாதிகாரத்தை அடக்க இதை விட ஒரு சிறந்த வழியும் இருக்க முடியாது. தொடர்ந்தாற்போல், மூன்று நாள்களாக 350 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாவம், இந்த நாடுகளுக்கு எவ்வளவு செலவு... உலக மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென எண்ணம் கொண்டுள்ள அந்தத் தியாக நாடுகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவைதான்.  கடாபி அடங்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம் என சூளுரைத்துள்ள அந்த நாடுகளின் தலைவர்கள் எவ்வளவு நல்லவர்கள்! 
நிற்க,
இலங்கையில் நடந்ததற்கும் இப்போது லிபியாவில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் ? கடாபியைப் போலத்தான் மகிந்தாவும் தன் சொந்த நாட்டு மக்கள் விமானத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தார்???? அதற்கும் மேலாக, அந்த நாட்டுத் தமிழ் மக்களை மிக மோசமான வகையில் கொடுமை படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது எங்கே சென்றன இந்த ஐரோப்ப அமெரிக்க நாடுகள் ??? இந்தியா என்ற தன்மானமற்ற நாடு இவர்களைத் தடுத்ததா ???  தன் நாட்டின் எல்லைப் பகுதியின் ஒரு பகுதியை இன்னும் வைத்திருக்கும் 'அந்த' அண்டை நாட்டிடம் தன் வீரத்தைக் காண்பிக்க முடியாத இந்தியாவா இந்த ஐரோப்பா அமெரிக்க நாடுகளைக் கட்டுப்படுத்தியது ??? 

*** ஒருகால் இந்தத் தமிழர் வாழும் பகுதிகளில் எண்ணெய் வளம் இல்லையா..
*** தனக்கு ஏறக்குறைய எல்லா அரபு நாடுகளும் அடங்கிப் போன பிறகு   
      இன்னும் அடங்காத அந்த லிபியாவைப் போல இலங்கை இல்லையோ..
எது எப்படியோ, புரியாத பல விசயங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கும் இந்த நாடோடிக்கு, இதுவும் புரியவில்லைதான்... யாராவது புரிந்தால் சொல்லுங்கள்...

No comments:

Post a Comment