இணைய உலாவிகளில்
இன்னும் தொலைந்து கொண்டேதான்
இருக்கிறேன்.....
தேடல் இயந்திரங்களில்
உன் பெயர்
தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது..
நீ மட்டும்தான்
இன்னும் தென்படாமல்!
முகநூல்களில் உன்னைத் தேடி
விரல்கள் எல்லாம் விறைத்துக் கொண்டன
உன் முகம் மட்டும்
முகவரி எழுதப்படாமல்...
பள்ளித் தெருக்களில்
உன் பாதச் சுவடுகளை
வரைந்து வரைந்து பார்த்ததை
மனம் இன்னும்
பத்திரமாய் வைத்திருக்கிறது..
ஒற்றைச் சடையில் உட்கார்ந்த
அந்தக் காற்றை
விரட்டிய பொழுதுகள்...
இன்னும் நனவின் விளிம்புகளில்!
கண்ணால் மட்டுமே
காதல் சொன்ன.... உன்
அந்தக் கடைசி நிமிடங்களை
இன்னும்
கைகளில் கெட்டியாகப் பிடித்திருக்கறேன்!
தேடல் இயந்திரங்களில்
உன்னைத் தேடும் இரவுகளை
நான் விடப் போவதில்லை..
அயல் தேசத்தில்
நீ அடைக்கலமான பிறகும்!!
14 மே 2011
Subscribe to:
Post Comments (Atom)
Great poem, keep posting.
ReplyDelete