Wednesday 23 March 2011

சில்லறைக் காசுகளும் சிதறுத் தேங்காய்களும்

கோவில் திருவிழாக்களில்
அந்த
சாமி ஊர்வலம் ரொம்ப பிடிக்கும்
எனக்கு.. என் நண்பர்ளைப் போலவே..
தெருவெங்கும் உடைபடும்
அந்தச் சிதறுத் தேங்காய்களுக்காக
நாங்கள் போட்டியாய்ப் பாய்வதுண்டு..
சில சமயம்
வாய்ச் சண்டையாய்த் தொடங்கி
கைச்சண்டையாய் ஆவதும் உண்டு..
அப்பொழுது எங்களுக்குத் தெரியாது
சண்டையென்றால்
பாராங் வேண்டும் என்று..
சிரிப்புகளிலும் சிலிர்ப்புகளிலும்
சமாதானமாய் ஆன காலங்கள் பல...
இப்பொழுது என்னவோ
அந்தச் சிதறுத் தேங்காய்களைப் பிடிப்பதில்லை..
சில்லறைக் காசுக்களுக்காக
சிதறுத் தேங்காய்களாய்  சிதறிப் போன
எங்கள் தலைவர்களைப் பார்க்கும் போது..
சில்லறைத் தலைவர்களுக்காக
சிதறுத் தேங்காய்களாய் சிதறிப் போன
அந்த தொண்டாகளுக்காகவும்
எனக்குச் சிதறுத் தேங்காய்களைப் பிடிக்காமல் போய்விட்டது..
சுனாமித் தேர்தலில் வெகுண்ட
எங்கள் சிங்கங்கள்..
சுண்டெலிகளாய் சுருண்டு கொள்ளும் போது...
சே..........
அட.....
காசோலைகளில் தான் இருக்கிறது
எங்கள் அரசியல்!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment