Monday 21 February 2011

மறக்க..................

கதவுகள் எல்லாம்

அடைக்கப்பட்ட பிறகும்

திருட்டுத்தனமாய்

நுழையும் வெளிச்சம் மாதிரி

நீ

கனவுகளின் இடுக்குகளில்

இன்னும் !



இடுக்கு வெளிச்சங்களில்

நிழல் பார்க்க முடியாதுதான்...

வாசம் கூடவே உணராது!!!

உன் பாதங்களின் அழுத்தங்களை

பாதை

உணராமல் இருக்கலாம்..

மனம் கூடவா ?



இளமை தெருக்களில்

கனவு வளைவுகளை அலங்கரித்த

உன் புன்னகைகள்....

வெளிச்சம் தூவிய

-----உன் பார்வைகள்..

இன்னும் !

No comments:

Post a Comment