கதவுகள் எல்லாம்
அடைக்கப்பட்ட பிறகும்
திருட்டுத்தனமாய்
நுழையும் வெளிச்சம் மாதிரி
நீ
கனவுகளின் இடுக்குகளில்
இன்னும் !
இடுக்கு வெளிச்சங்களில்
நிழல் பார்க்க முடியாதுதான்...
வாசம் கூடவே உணராது!!!
உன் பாதங்களின் அழுத்தங்களை
பாதை
உணராமல் இருக்கலாம்..
மனம் கூடவா ?
இளமை தெருக்களில்
கனவு வளைவுகளை அலங்கரித்த
உன் புன்னகைகள்....
வெளிச்சம் தூவிய
-----உன் பார்வைகள்..
இன்னும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment